Tuesday, March 10, 2015

பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போறாங்கடா....

இளைஞன் ஒருவன் தனது முடியை நீளமாக வளர்த்திருந்தான். 

அது அவனுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அவனுடைய அப்பா முடியை வெட்டிக் கொள்ளுமாறு பலமுறை சொல்லியும் அவன் கேட்கவில்லை.

ஒருமுறை அப்பா சொன்னதும் அவன் எரிச்சலடைந்தான்.

"நான் முடி வளர்த்தா உங்களுக்கென்னப்பா? நான் முடியை எல்லாம் வெட்டிக் கொள்ளமாட்டேன்'' என்றான்.

அப்பா வருத்தத்துடன் சொன்னார்:

"உன் அக்காவைப் பெண் பார்க்க நம் வீட்டுக்கு வர்றவங்க எல்லாரும் உன்னையப் பார்த்துட்டு பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போறாங்கடா"

No comments:

Post a Comment