Tuesday, April 16, 2013
20 ஆண்டுகள்
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.
வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.
அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.
மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன
ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?”
என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?
20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?
இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!
# இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...
Wednesday, April 10, 2013
இந்தியன் பார்
இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.
”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு
பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம்
ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.
அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப்
பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக்
கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று
கேட்டார்.
”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று
பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப்
பார்த்தேன்” என்றார் அவர்.
#யாருகிட்ட...நாங்கெல்லாம்.....
ஒர் Doubt.
Exam ஆரம்பிக்கும் முன்...
மாணவன் : டீச்சர் எனக்கு ஒர் Doubt...
டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,
இப்ப போயி என்னடா Doubt..?
மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?
பல்வலி
ஒருவன் பல்வலின்னு பல் மருத்துவரை பார்க்க போனான்.
”பல்லைப் பிடுங்கித்தான் ஆகணும். வலிக்காம இருக்க மயக்க மருந்து ஊசி போடணும், இப்ப என்னிடம்
மயக்க ஊசி இருப்பு இல்ல, அதனால நாளை வா ” -னாரு டாக்டர்.
“அதெல்லாம் வேண்டாம் டாக்டர். எனக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் உண்டு.
அப்புறம் நிறையத் தைரியம் வந்திடும். நீங்க பல்லைப் பிடுங்கிக்கலாம்”
அப்படின்னான். டாக்டர் அவன் வழியிலேயே விட்டுட்டார். அவன் வெளியே போய்
தண்ணி அடிச்சான். என்னைக்கும் ஆஃப்தான் அடிப்பான். அன்னைக்கு ஃபுல்லா
அடிச்சான். ஆஃப் ஆயிட்டான். தள்ளாடிக்கிட்டே வந்து நாற்காலியிலே
உட்கார்ந்தான்.
”தைரியம் வந்திடுச்சா” ன்னார் டாக்டர்.
“ஏகப்பட்ட தைரியம் வந்துடுச்சி டாக்டர்” அப்படின்னு போதையிலே உளறினான்.
”ஏகப்பட்ட தைரியம்னா ?” ன்னார்.
“எந்தப் பய என் பல்லுல கை வைக்கிறான்” னு பார்க்கிறேன் அப்படின்னான். டாக்டர் ஆடிப்போயிட்டார்
என்ன படிச்சு இருக்காங்க...?
அப்பா......மகனிடம் :- உங்க மிஸ் என்ன படிச்சு இருக்காங்க...?
மகன் :- படிக்கலைப்பா?
அப்பா :- என்னடா சொல்ற?
மகன் :- ஆமா பா.........அவங்க மக்கு..........நான் L .k.G முடிச்சு U.K.G
போய்டேன்........அவங்க இன்னும் L .k.G லேயே மிஸ்ஸா
இருக்காங்க..........அப்ப மக்கு தானே?
அப்பா :- ?
என்ன வித்தியாசம்?
கொசுவுக்கும் பசுவுக்கும் என்ன வித்தியாசம்?????????
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பசு தன் இரத்தத்தை பாலா குடுக்குது........
கொசு நம் இரத்தத்தை பால் மாதிரி குடிக்குது ......
Subscribe to:
Posts (Atom)