Thursday, March 5, 2015
Jokes Collection - 2
"டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"
Jokes Collection - I
ஆசிரியர்: டேய்... பக்கத்துல தூங்குறவனை எழுப்பு.
மாணவன்: இது நல்லாயிருக்கே, நீங்க தூங்க வைப்பீங்க.. நான் எழுப்பனுமா?
==============
டாலரைப் பணமா மாற்றும் இடத்தில் நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரா..எப்படி?
கழுத்துல போட்டிருந்த முருகர், விநாயகர் டாலரைக் கொடுத்து பணம் கேட்டுத் தொலைச்சுட்டார்..!
====================
ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
“ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
===============
நாய் துரத்தற மாதிரி கனவு வருது டாக்டர்!
மூணு நாலு கல்லைக் கையிலே வெச்சுக்கிட்டு
தூங்குங்க!
=============
தம்பி...இந்த சோப்பு டப்பாலே சின்ன சின்ன ஓட்டை எதுக்கு இருக்கு தெரியுமா?..
ஓட்டை பெரிசா இருந்தா சோப்பு கிழே விழுந்துரும் அதனாலே தான்...இது கூட தெர்லே...
============
தலைவர் ரொம்ப புகழ்ச்சி எதிர்பார்ப்பாரு…!
எப்படிச் சொல்றே?
தன்னை, ‘விடிவெள்ளி’ன்னு கோஷம் போட்ட தொண்டரைக் கூப்பிட்டு கண்டிச்சு, ‘விடிதங்கம்‘ன்னு கோஷம் போட சொல்றாரு..!
==========
தலைவர் பதவியே போயிடுச்சே…இனி என்ன செய்ய போறீங்க?
எனக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை வச்சு, மருத்துவம்
செய்து பொழைச்சுக்குவேன்…!
================
என்ன சொல்றே ராம்குமார், ‘ஏட்டும் சேட்டும்' உன்
வாழ்க்கையில் ரெண்டு கண்கள் ‘ மாதிரியா?
திருட வேண்டிய இடத்தை ஏட்டு சொன்னா, திருடிய
பொருளை சேட்டு வாங்கிக்கிறாரே!
================
ச்சே.. வாய் பேச முடியாதவக்கிட்ட கூட இந்த போலீஸ்காரர் மாமூல்
வாங்கியிருக்கார்ன்னு எப்படிச் சொல்றே?
உள்ளங்கையில் நூறுன்னு எழுதியிருக்கார் பாரு…!
==========
செ யலாளரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து
நீக்கிட்டாரு?
கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சிய செலவுன்னு மெடிக்கல்
பில் வெச்சு லட்சங்கள் பல சுருட்டிட்டாராம்!
=========
சார், இது சாம்பார் கரண்டி, இது ரசக்கரண்டி இது மோர்க்கரண்டி
அப்போ..வித்தியாசமா...இருக்கே.. .இது...?
இது…?சண்டைக்கரண்டி!!
=============
என் சம்பளத்தை உயர்த்தணும்
ஸாரி..அது மட்டும் முடியாது, வேற என்ன வேணாலும்
கேளுங்க!
ஒ கே , மாசம் இரண்டு தடவை சம்பளம் கொடுத்திடுங்க!
===============
என்னது நம்ம கட்சிக் கொடியில் அடிக்கடி சின்னத்தை
மாத்தணுமா ?
ஆமாம் தலைவா! புதுசா வீச்சருவா சின்னத்தைப்
போட்டாத்தான் எதிர்க் கட்சிக்காரங்களுக்கு கொஞ்சம்
பயம் வரும்!
===============
கணவன் : இது உன் புதுப்புடவையா ?
மனைவி : எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?
கணவன் : இதுவரை நான் துவைக்காத புடவையா இருக்கே!
===============
டாக்டர் : நூறு ரூயாய்க்கு சில்லறை இல்லை!
அதுக்காக மீதிப் பணத்துக்குப் பதிலா இன்னொரு வைட்டமின் ஊசி போட்டுக்கச் சொல்றது நல்லா இல்லீங்க டாக்டர்!
=================
தலைவருக்கு டாக்டர் பட்டம் தந்தது தப்பு !
ஏன்?
மகளிர் அணியில யாரைப் பார்த்தாலும் ஜூரம்
அடிக்குதான்னு தொட்டு தொட்டு பார்க்கிறாரே!
==================
கோவத்துல் என் மனைவி என்னை அடிக்க வந்தப்ப, ஒண்ணு கொடுத்தேன் பாரு, அப்படியே அசந்துட்டா!
அடியா கொடுத்தே?
அரைப் பவுன் மோதிரத்தை!
=============
சுத்தம் சோறு போடும்....
அப்போ..இடைத்தேர்தல்..?
பிரியாணி போடும்!
==============
கணவன் : எங்கம்மா எது வாங்கினாலும் வாயில் போட்டுப் பார்த்துதான் வாங்குவாங்க!
மனைவி : அப்போ கொஞ்சம் எலி மருந்து வாங்கி வரச் சொல்லுங்க!
==========
நீதிபதி; ஜவுளிக்ககடையில் சேலை திருடிய பெண்ணுக்கு ரூ 5000 அபராதம்…விதிக்கிறேன்.... திருடியவர் ஏழை..என்பதாலும்..மாசம் ஆடி என்பதாலும்...ஆடித்தள்ளுபடி போக
ரூ 3000 செலுத்தினால் போதுமென தீர்ப்பு
கூறுகிறேன் .!
=============
டாக்டர், நர்ஸ் பண்றது நல்லா இல்ல!
என்ன?
நான் ஆபரேஷன்ல பிழைப்பேனா மாட்டேனான்னு
இன்னொரு நர்ஸ்கிட்டே பெட் கட்டுறாங்க!
===============
தலைவருக்கு கொழுப்பு அதிகம்னு டாக்டர் சொல்லிட்டாராம்!
இதுக்கு ஏன் அவர் டாக்டர்கிட்டே போகணும்?
நமக்கே தெரியுமே!
===================
தலைவரே, அண்ணா சாலைல பயங்கர டிராஃபிக் ஜாம்!
அதை ஏன் கிட்டே வந்து சொல்றே?
கூட்டம் உள்ள இடத்துல பேசணும்னு நீங்கதானே
ஆசைப்பட்டிங்க!
===================
காலேஜிலே படிக்கிற ஹீரோ நிறைய அரியர்ஸ்
வெச்சிருக்காரு!
அப்ப, படத்துக்கு மக்குபாய் – னு டைடில் வெச்சிடலாம்!
============
ஜவுளிக் கடை மாடியிலேர்ந்து ஏம்மா குதிச்சு தற்கொலைமுயற்சி பண்ண?
எவ்வளவு தேடியும் மேட்சிங் பிளவுஸ் கிடைக்கலை!
=============
எதுவா இருந்தாலும் இரண்டு மணி நேரம் கழிச்சிதான்
சொல்ல முடியும்!
நிலைமை அவ்வளவு மோசமா டாக்டர்?
நீங்கதானே ‘பணம் கட்ட இரண்டு மணி நேரம் ஆகும்’ னு
சொன்னீங்க!
=============
என்னப்பா! பேப்பர் மசாவுல ரெண்டு ஓட்டை போட்டிருக்கு!
ஃபைல் பண்ணி வச்சிருந்தோம் சார், அதான்!
==============
பஸ்ல ரொம்ப கூட்டமா இருந்தா, பக்கத்தில் நிற்பவரிடம் ‘இந்த பஸ் துபாய் போய்ச் சேருமான்னு கேளுங்க…பத்தடி தள்ளியே நிப்பானுங்க!!!
==============
மேடைல பேசிட்டு வந்ததும் நான் தண்ணி
அடிக்கறதைப் பத்தி என்ன நினைக்கிறே?
எல்லாரும் குடிச்சிட்டு உளறுவாங்க, நீங்க உளறிட்டு
குடிக்கறீங்க, தலைவரே!
என்..வீட்டு காரருதான்...
நிருபர் : ஏம்மா..வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்...
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க,என்..வீட்டு காரருதான்.. குடிச்சுட்டு வந்திருக்கார்னு நினைச்சுதான்....அந்த வெளு...வெளுத்தேன்....
கம்பராமாயணத்தை எழுதியது யார்டா?
வாத்தியார்: கம்பராமாயணத்தை எழுதியது யார்டா? கேள்விலேயே பதில் இருக்கு!
பையன்: ராமர் சார்!
வாத்தியார்: கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
பையன்: அப்போ கிருஷ்ணர் சார்!
வாத்தியார்: அட ராமா!
பையன்: அப்ப...கண்டிப்பா ராமர்தான் சார்!
வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?
"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
(கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர், மனைவி: பக்கா குடும்ப விளக்கு)
கணவன்: அன்பே, வந்துட்டேன்
மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?
கணவன்: BAD COMMAND OR FILE NAME.
மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?
கணவன்: ABORT,RETRY,IGNORE.
மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?
கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.
மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.
கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.
மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.
கணவன்: DATA TYPE MISMATCH.
மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.
கணவன்: BY DEFAULT.
மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: HARD DISK FULL.
மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?
கணவன்: UNKNOWN VIRUS DETECTED.
மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?
கணவன்: TOO MANY PARAMETERS.
மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.
கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.
மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!
கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.
மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.
கணவன்: SHUT DOWN THE COMPUTER.
மனைவி: நான் போறேன்.
கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER
திருடன்
ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன்.
அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. அவன் வேற நாட்டுத் திருடன்.
அவன் பேசற மொழி தெரியல.
அந்த மொழித் தெரிந்த ஒரு மந்திரியை கூப்பிட்டு பேசச் சொன்னாரு ராஜா.
மந்திரி,
"‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ உன்னை காப்பாத்துறேன் என்றார்
அவனும் பயத்துல அந்த மந்திரிக்கிட்ட கட கடன்னு உண்மை எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..
‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்ல மாட்டேங்கறான்.
இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’
அப்பவே நம்ம மந்த்ரிங்க எல்லாம் அப்படித்தான் போல
Subscribe to:
Posts (Atom)