Saturday, April 19, 2014

கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி



மச்சி ! என்னக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ரெண்டு பொம்பளைக என் பின்னாடியே அலையுறாங்கடா... தொல்ல தாங்க முடியல.... நீ தான் அவங்க கிட்டப் பேசி, " நம்ம தோஸ்த்து இப்பத்தான் வேலைக்குப் போயிருக்கான். கொஞ்சம் பேச்சுலர் லைப அனுபவிக்க விடுங்க அப்பறமாக் கல்யாணத்தப் பத்தி அவனே சொல்லுவான் ... சும்மாத் தொணதொணன்னு பின்னாடியே அலையாதீங்க" ன்னு சொல்லிப் புரிய வைக்கணும்டா"
ப்ரெண்ட் (மைண்ட் வாய்சுல " ஓம் பின்னாடியா? அதுவும் ரெண்டு பேரா? ஹி...ஹி...ஹி...) சொல்லு மாப்பு!... பேசிப் பாப்போம்... அவங்க எங்க இருக்காங்க?
மச்சி ! எங்க வீட்டுலையே தாண்டா இருக்காங்க....
மாப்பு! என்னடா சொல்லுற ? யாருடா அவங்க???
அது ... வந்து மச்சி ! என்னோட பாட்டியும் அம்மாவும் தாண்டா...
மச்சி: " அடச்சீ .... இதுக்குத் தான் இந்த பில்டப்பா???

No comments:

Post a Comment