Wednesday, February 25, 2015

கொஞ்சம் சிரிங்க பாஸ்........

”இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர்
கால்..ல.. விழுந்து மன்னிப்புக் கேட்டாரு”
“”அப்புறம்?”
"“என் கொலுசைக் காணோம்”
##############################
உங்க தாத்தா ஏன் கோபமா இருக்கார்?
அவரோட கனவுக்கன்னி, கட்சியிலே சேர்ந்துட்டதால
ஒரு வகைல அவருக்கு உடன் பிறப்பு ஆயிட்டாங்களாம்…!
###################################
உங்களை இப்படி ரத்தம் வர்ற மாதிரி அடிச்சிட்டு ,
உங்க மனைவி ஏன் தலைமறைவாயிட்டாங்க..?
அவ ரொம்ப பயந்த சுபாவம் இன்ஸ்பெக்டர்..!
########################################
வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார். . .
########################################
“சொத்துக் கணக்கு கேட்டதுக்கு நம்ம தலைவர் அவருக்கு
பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை கோர்ட்டுக்கு
அழைச்சிட்டு வந்திருக்காரே ஏன்?”
“படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும்
தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தானாம்”
########################################
“”வேலை முடிஞ்சு இவ்வளவு லேட்டா வீட்டுக்குப் போறீயே…
வீட்டில் மனைவி திட்டமாட்டாங்களா? ”
“”எனக்குத்தான் கல்யாணமே ஆகலையே?”
“”அப்புறம் ஏன் லேட்டாப் போகிறே?”
########################################
பெண்களுக்கே இங்கு சமாதானங்கள் தேவைப்படுகிறது....
ஆண்கள் என்னைக்கு கோச்சுக்கிறாங்க...
கோச்சுக்கிட்டா மட்டும் யார் சமாதான படுத்த வராய்ங்க...
அவங்கள அவங்களே சமாதானப்படுத்திக்கினாதான் உண்டு.
########################################
மன்னர், மகாராணியைக் கடத்தும்போது சும்மாவா
இருந்தார்..?
யார் சொன்னது கடத்தியவன் காலைத் தொட்டு
வணங்கி விட்டல்லவா வந்தார்…!
########################################
அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு...
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
########################################
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
.
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
########################################
கமலா, அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே..?
உடம்பு முடியலைனு சொன்னதும், ஆட்டோ வெச்சு
அக்கறையா என் மருமகள் அவரிடம் கூட்டிப்
போனாளே…!
########################################
எதுனா போட்டுக் கொடுங்க சார்..!
நேத்து உன் பொண்டாட்டியை சினிமா
தியேட்டர்ல பார்த்தேன், கூட யாரோ ஒரு
தடிப்பையன் வந்திருந்தான், போதுமா..!

No comments:

Post a Comment