Wednesday, February 25, 2015

வாண்டு பாபு

டீச்சர்: பாபு,
கண்ணை மூடி சாமி கும்பிட்டியே...
என்ன வேண்டிக்கிட்ட?
வாண்டு பாபு: இந்த
பள்ளிக்கூடத்துல
எல்லா வகுப்புகளுக்கும்
நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன
்.
டீச்சர்:
உன்னை மாதிரி மாணவன்
கிடைக்க நான்
கொடுத்து வச்சிருக்கணும்.
சரி எதுக்காக
இப்படி வேண்டிக்கிட்ட?
பாபு: நான் பெற்ற துன்பம்
எல்லாரும்
பெறட்டுமேன்னு தான்!
******************************
********************
டீச்சர்: இந்தப் பறவையோட
காலைப்
பார்த்து இது என்ன
பறவைன்னு கண்டுபிடி பார்ப்போம்"
வாண்டு பாபு:
"தெரியலை"
டீச்சர்: "இது தெரியலியா?
நீயெல்லாம்
உருப்படவா போற!! உன்
பேரு என்னடா?"
வாண்டு: "என் காலைப்
பார்த்து நீங்களே கண்டுபிடிங்க
பார்ப்போம்!!"
டீச்சர்: ???
******************************
********************
ஆசிரியர் : விலங்குகளின்
கண்களுக்கு அதிக
சக்தி உள்ளது என்று எப்படிச்
சொல்கிறாய் பாபு?
வாண்டு பாபு :
அதுங்கதான்
கண்ணாடியே போடறதில்லையே டீச்சர்!
டீச்சர்: ???
******************************
********************
கணக்கு டீச்சர்: பாபு,
உன்கிட்ட முதல்ல 2 முயல்
தர்றேன், அப்புறம் 2 முயல்
தர்றேன், கடைசியா 2
முயல் தர்றேன்.
இப்போ உன்கிட்ட
எத்தனை முயல் இருக்கும்?
வாண்டு பாபு: 7 முயல்
இருக்கும் டீச்சர்!
டீச்சர்: என்ன? நல்லா கூட்டிப்
பாரு 6 முயல் இருக்கும்.
பாபு: இல்ல டீச்சர், 7 முயல்
இருக்கும்!
டீச்சர்: எனக்கு கோபம்
வருது பாபு... எப்படி 7
இருக்கும்?
பாபு: எங்க வீட்ல
ஏற்கனவே ஒரு முயல்
இருக்கு. நீங்க கொடுக்குற
6 முயலோட அதையும்
சேர்த்தா 7
தானே இருக்கும்....!
டீச்சர்: ???
******************************
********************
ஆசிரியர்: டேய் பாபு..
டீச்சர்னு மரியாதை இல்லாம
என் மேல சைக்கிளால
மோதுன?
வாண்டு பாபு: பிரேக்
புடிக்கல சார்
ஆசிரியர்: பிரேக்
புடிக்குதே...
வாண்டு: பிரேக்கை நான்
புடிக்கல சார்!
ஆசிரியர்:???
******************************
********************
டீச்சர்: படிச்சு முடிச்சதும்
என்ன செய்யலாம்னு இருக்க
பாபு?
வாண்டு பாபு:
புக்கை மூடிடலாம்னு இருக்கேன்!
டீச்சர்: ???
******************************
********************
ஆசிரியர்: நியூட்டன்
ஒரு மரத்தடியில்
உட்கார்ந்திருக்
கும்போது, அவர்
தலையில் ஒரு ஆப்பிள்
விழுந்தது. அவர்
புவியீர்ப்பு விசையைக்
கண்டுபிடித்தார்.
இதிலிருந்து என்ன
தெரிகிறது?
வாண்டு பாபு:
இப்படி வகுப்பறையில
உட்கார்ந்துக்கி
ட்டு புத்தகத்தைப்
புரட்டிக்கிட்டு
இருந்தா ஒன்னும்
கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது.
ஆசிரியர்:???

No comments:

Post a Comment