Wednesday, February 25, 2015

சிரிக்க மட்டும் ஹி,ஹி,ஹி .....!!

“காலம் ரொம்ப கெட்டுப்போச்சுனு எப்படிச் சொல்ற?”
“பின்ன, பால்கடை வாசல்ல ‘இங்கு சுத்தீகரிக்கப்பட்ட
சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்’னு
எழுதியிருக்காங்களே!”
==================================
அப்பா: ராமு ஸ்கூல்ல உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?
ராமு: மணியடிக்கிற பியூனைத்தாம்பா எனக்கு ரொம்பப் பிடிக்கும்!!
==================================
ஆசிரியர்: சந்தேகம் இருந்தால் கேளுங்கள்!
மாணவன்: நாங்கள் படிப்பது சமச்சீர் கல்விதானே…
ஆசிரியர்: ஆம்…மாணவன்: பிறகு ஏன் மதிப்பெண்கள் ஏற்றத் தாழ்வுகளாக இருக்கின்றன?
==================================
என்ன வேணும் சார்?னு கேட்டிட்டுப் போன
சப்ளையர் ஒண்ணும் கொண்டு வரலையே?”
“அட எழவே! அவன் வேலையை விட்டுப் போயி
மூணு நாளாச்சே!
இன்னுமா இங்கே உக்கார்ந்திருக்கீங்க?”
===================================
“நகைக்கடைக்காரர் மகளை கல்யாணம் பண்ணிணியே,
எப்படி போவுது?”
“பொண்ணு, “தங்கச் சிலை” மாதிரி இருக்காள்ன்னு
வாய் தவறி சொல்லிட்டேன், இப்போ,
என் மாமனாரும், மாமியாரும், “செய்கூலி” வேணும்ன்னு
அடம் பிடிக்கிறாங்க..!
========================================
“கல்யாண வீட்டில பத்திரிகையை வைத்துக்கொண்டு யாரைத்
தேடிக்கிட்டிருக்கீங்க…?”
“இந்தக் கல்யாணப் பத்திரிகையில தங்கள் நல்வரவை விரும்பும்…ன்னு
நாற்பது பேரைப் போட்டிருக்காங்களே…அவங்களத்தான்
தேடிக்கிட்டிருக்கேன்
===========================================
“கபாலி…. நீ தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்னு
சொன்னேனே…. ஏன் வரலை?”
“எந்த ஸ்டேஷன்னு சொல்லாததால, ரயில்வே ஸ்டேஷனுக்குப்
போயிட்டேன் ஏட்டய்யா…!”
=============================================
ஒரு அமெரிக்க இளைஞனும், ஒரு சிவப்பு இந்திய இளைஞனும்
ஒரு பாலை வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.
பொழுது சாய்ந்திடவே ஓரிடத்தில் தங்கள் கூடாரத்தினை
அமைத்து அதனுள் இருவரும் படுத்தனர்.
இரவு சுமார் மணி மூன்று இருக்கும். சில்லென்று காற்று வீசவே
சிவப்பிந்தியஇளைஞன் விழித்துக் கொண்டான். நண்பனை எழுப்பிக்
கேட்டான், “மேலே பார். என்னதெரிகிறது?” என்று.
வெள்ளை இளைஞன் சொன்னான், “கோடிக் கணக்கான நட்சத்திரங்கள்
இருக்கின்றன” என்று.
சிவப்பிந்தியன் கேட்டான், “அப்புறம்?”
“வான சாஸ்திரப்படி சொன்னால் அந்த நட்சத்திரங்களைச் சுற்றி
பலகோடி கிரகங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது.”
“அப்புறம்?”
“ஜோதிட சாஸ்திரப் படி சொன்னால் சனி கிரகம் சிம்ம லக்னத்திற்கு
நகர்ந்துள்ளது.”
“அப்புறம்?”
“வானிலை சாஸ்திரப் படி சொன்னால் நாளை மேக மூட்டமிருக்கது.”
“நண்பா நமது கூடாரத்தை யாரோ திருடி கொண்டு போய்விட்டார்கள் என்பது தெரியவில்லை உனக்கு..!?”?????????????
=========================================
.”என்னடா இது, பரீட்சையிலே 0 வாங்கிட்டு வந்திருக்கே?
ஒழுங்காப் படிக்கலியா?”
“ஐயோ, அது ஜீரோ இல்லைப்பா! நான் சூப்பரா படிக்கிறேன்னு
டீச்சரே எனக்காகப் பெரிசா ஒரு “ஓ” போட்டிருக்காங்க!”
========================================
.”தினமும் புலம்புவீங்களே, இன்னிக்கு எப்படி, காஃபி
ஸ்ட்ராங்கா இருக்கா?”
“சூப்பர்டி செல்லம்! எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்க்?”
“அதுவா, ஒரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்!”
=======================================
மனைவி: “உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ’
சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே
இருந்தேன்”
கணவன் : “பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என்
வாழ்க்கையிலேயே கடைசியா நான் மகிழ்ச்சியா இருந்தேன்”
================================================
பெண் : நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டா, உங்களோட துக்கம்,
பிரச்சனை எல்லாத்திலும் நானும் சம பங்கு எடுப்பேன்.
ஆண் : “எனக்கு துக்கம், பிரச்சனை எதுவும் இல்லை”
பெண் : “அவசர‌ப்படாதீங்க, நாமதான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலையே”
================================================
பிச்சைக்காரர்: “அம்மா தாயே… பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.”
வீட்டுக்காரம்மா: ” பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா…
எனக்கு காது கேட்காது.”
=================================================
“கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?”
“சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்”
=================================================
ஒருத்தி: “இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?”
மற்றவள்: “ஏன் கேட்குறே?”
முதலாமவள்: “என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்”
================================================
“யாரோ எழுதிக் கொடுத்ததை தலைவர் மேடையில்
படிக்கிறார்னு எதிர்கட்சி குற்றம் சொல்லிச்சே,
தலைவர் என்ன பதில் சொன்னார்?”
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு சமாளிச்சிட்டாரு”
=============================================
=============================================
எதுக்கு இடுப்பில் இரண்டு கையும்வச்சிகிட்டு தும்மறீங்க?
நான் தான் சொன்னேனெ எனக்கு இடை விடாத தும்மல்னு!
=============================================
ஐயையோ! ஸ்கேன்ல உங்க குடலையே காணோமே…?
நீங்க தானே டாக்டர் காலி வயித்துல ஸ்கேன் எடுக்க சொன்னீங்க…!
=============================================
======================================
பெண் : ‘‘என்ன டாக்டர் சொல்றீங்க…
என் மாமியார் இறந்துட்டாங்களா?’’
டாக்டர் : ‘‘ஐயம் சாரி மேடம்… நா எவ்வளவோ
ட்ரை பண்ணினேன். பட் திஸ் இஸ் மெடிக்கல்
மிராக்கிள். பொழைச்சிக்கிட்டாங்க..
======================================
மகாராணி : ‘‘அரசே இளவரசர் சாப்பிடக்கூட வராமல்,
எந்நேரமும் வில்லு, சிலம்பாட்டம் என்றே இருக்கிறார்’’
அரசர் : ‘‘ஹி…ஹி…. அவனாவது எதிரியிடம்
புறமுதுகிடாமல் இருக்கட்டுமே’’
மகாராணி : ‘‘மண்ணாங்கட்டி… எந்நேரமும் வில்லு,
சிலம்பாட்டம்னு சினிமா பாத்து சீரழியுறார்னு சொல்ல
வந்தேன்’’
======================================

No comments:

Post a Comment