Tuesday, April 24, 2012

என் நண்பனை


எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம்..அழகான பெண், அண்ணா என்றழைப்பதுதான்....# என்னையல்ல..என் நண்பனை...

....(ஒரு கற்பனை)...

சட்டசபையில் விஜயகாந்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை இடப்பற்றாக்குறை காரணமாக சுருக்கிவிட்டார்களாம். அமைச்சர் ஓ.பி.யிலிருந்து சபாநாயகர் வரை விளக்கம் சொல்லிவிட்டார்கள். இனி இதைப்பற்றி ஜெயலலிதா விளக்கம் சொன்னால்....(ஒரு கற்பனை)...

எதிர்கட்சித்தலைவரின் அறையை சுருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எங்களுக்கு இல்லை. இப்போது மின் பற்றாக்குறை காரணமாக அந்த அறையில் ஏ.சி., சில நேரங்களில் வேலை செய்வதில்லை என்று கேள்விப்பட்டேன்.  அறையோ பெரியது. ஆனால், ஏ.சி.யோ ஒரு டன்தான். இந்த சின்ன ஏசியிலிருந்து வரும் குளிர்காற்று அந்த அறையை முழுமையாக குளிரூட்டமுடியவில்லை என்று சொன்னார்கள்.அதனால், ஏசியை மாற்றுவதை விட, அறையை சின்னதாக்கிவிட்டால் ஏசிக்காற்று எல்லா இடங்களிலும் அப்ளையாகி விரைவில் ரூம் குளிர்ந்துவிடும் என்பதால் அறையை சுருக்கிவிட்டோம்...வேறெந்த உள் நோக்கமும் எனக்கு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித இனம் எப்படி தோன்றிற்று..?

மனித இனம் எப்படி தோன்றிற்று..?

மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்.."கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்.."குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.."என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

"நிஜமாவா?"

"இந்த சிகரெட் பிடிக்கறதை விட்டுடப் போறேன்."

"நிஜமாவா?"




"ஆமாம்.. இதுக்கு மேல பிடிச்ச கைய சுட்டுடும்."

அன்று.......இன்று....


அன்று.......

சுதந்திரப்போராட்ட வீரராக வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜி கணேசன் சிம்மக்குரலில் ஜாக்சன் துரையோடு நடத்திய போராட்டம் 








இன்று....

கல்யாண் ஜூவல்லர்ஸ்க்காக பிரபு சிம்மக்குரலில்(?) நடத்தும் புரட்சிப்போராட்டம். 




எந்த சேனலை திறந்தாலும் ஒரு நாளுக்கு பலதடவை இந்த விளம்பரத்தை ஒளிபரப்பி கடுப்பேத்துறாங்க  மைலார்ட்.....

Wednesday, April 18, 2012

Donot disturb while counting?

Did u have any lover before our marriage?

Wife : remains silent.

husband : what is the meaning for this silent.

wife : Donot disturb while counting?

அமைதிப்பூங்காவான தமிழகமும், ஜெ.,ஆட்சியும்.....

ஜெயலலிதா வாயைத்திறந்தாலே தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றே சொல்கிறார். தினமும் கொலை, கொள்ளை என்று நிகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டை எதன் அடிப்படையில் அமைதிப்பூங்கா என்று சொல்கிறார் என்று மாத்தி யோசித்ததன் விளைவு.....

முன்பெல்லாம் தமிழ்நாட்டில் மின்சாரம் தடை இல்லாமல் வந்துகொண்டிருக்கும். அப்படி தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்போது.....
எல்லோர் வீட்டிலும் எந்த நேரமும் டி.வி., இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கும். இப்போதுதான் மின்சாரமே வருவதில்லையே....அதனால் எல்லோர் வீடும் அமைதியாகத்தானே இருக்கும்.

அதைப்போல் மியூசிக் சிஸ்டம், ஹோம் தியேட்டர் போன்றவை இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதால் தமிழ்நாடு அமைதி பூங்காவாகிவிட்டது.
யார் வீட்டிலும் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என்று ஏதும் ஓடுவதில்லை. அதனால் தமிழகம் சத்தம் இல்லாமல் அமைதிப்பூங்காவாகிவிட்டது.

ரைஸ் மில், ப்ளவர் மில் போன்ற மிகுந்த இரைச்சல் தரும் சாதனங்கள் மற்றும் விசைத்தறி போன்றவைகல் மின்சாரம் வராததினால் இயங்குவதில்லை. அப்படியானால் அமைதிப்பூங்காவாகத்தானே இருக்கும் தமிழகம்.

Tuesday, April 17, 2012

நான் கம்மியாகத்தானே திருடுகிறேன்

2011 ஆம் ஆண்டு தி.மு.க.,ஆட்சி இறுதியில் அதாவது ஜனவரி, பிப்ரவரியில் 800 திருட்டுக்களும், இந்த ஆண்டு (2012) ஆம் ஆண்டு இரு மாதத்தில் என் ஆட்சியில் 729 திருட்டுக்களும் நடந்துள்ளது. அதாவது தி.மு.க.,ஆட்சியை விட என் ஆட்சியில் திருட்டு கொஞ்சம் குறைந்துள்ளது.

அதைப்போல் கடந்த ஆண்டு தி.மு.க.,ஆட்சியில் 153 கொலைகள் நடந்துள்ளது. ஆனால், என் ஆட்சியில் அதைவிட குறைவாக 123 கொலைகள் தான் நடந்துள்ளது என்று ஜெயலலிதா தி.மு.க.,ஆட்சியோடு தன் ஆட்சியை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
இதைசொல்லவா இவரை முதலமைச்சராக தமிழக மக்கள் அமர்த்தினார்கள்?

ஒரு கடையில் ஒருவன் 1000 ரூபாய் திருடிவிட்டான் என்பதற்காக அவனை வேலையிலிருந்து நீக்குகிறார் முதலாளி. அதே வேலைக்கு வேறு ஒருவனை அமர்த்துகிறார். அவனும் 800 ரூபாய் திருடுகிறான். உடனே முதலாளி அவனிடம் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு முன்பு திருடியவனை விட நான் கம்மியாகத்தானே திருடுகிறேன் என்று சொன்னானாம். அதுப்போல்தான் இருக்கிறது ஜெயலலிதா சொல்வதும்.

ரோபோ அல்லது அடிமை

எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. அம்மாவின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. அம்மாவின் நட்பே எங்கள் நட்பு. எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. அம்மாவின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. அம்மாவின் வழியே எங்கள் வழி. அம்மாவுக்கு எங்கள் உடல், பொருள், ஆவி என, அனைத்தையும் தியாகம் செய்தோம் என்று தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் நிதியமைச்சருமான ஓ.ப்ன்னீர்செல்வம்.

இதை தனியா வேற சொல்லனுமா? அதான் தெரியுமே?
அதுசரி....இப்படி தனித்தனியா பிரிச்சு சொன்னதற்கு பதில் ஒரே வார்த்தையில் சொல்லிட்டுபோயிருக்கலாம் நாங்கள் எல்லாம் ரோபோ அல்லது அடிமை என்று.......

I Dont know

Sir-What happened in 1869?
Snta-I Dont know
Sir-Stupid. Gandhi was born
Now tell what
happened in 1873?
Snta-Gandhi was 4 years old

he’s SERIOUS

When a GIRL thinks of her future with her boyfriend, It’s NORMAL…!! But when a BOY thinks of his future with his girlfriend, he’s SERIOUS !!!

அதுதான் நிதர்சனம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் புத்தாண்டு மீண்டும் தைத்திங்களுக்கு மாறிவிடும் என்று சொல்லியிருக்கிறார் கலைஞர். வழக்கமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சிதான் மாறும். முதல்வர்தான் மாறுவார்கள். ஆனால் இப்போது புத்தாண்டும் மாறிவிடுகிறது. இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது? சரி மாறாதது ஓட்டுப்போட்ட மக்களின் நிலைமைதான். அதுதான் நிதர்சனம்.

Monday, April 2, 2012

2nd clas

2frnds failed in 2nd clas again & again.
1 of dem:lets sucide yaar..
2nd one:shut-up dude, if v sucide v hav 2 strt again 4rm LKG in next birth

April 1

Hey U Know
Which is the best day to propose a girl.. April 1
U Know Why??
If she accept its your luck
otherwise just tell April Foooooll.

Newtons Universal Law Of Love

Newtons Universal Law Of Love:
Every boy on earth is attracted towards a girl
with a force directly proportional tothe figure of the girl
and
Inversely proportional to strength of her brother..!!