Monday, September 23, 2013

ஹா..ஹா..

வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
..

..

..

யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்!

ஹா..ஹா..

பசங்க மேல தப்பில்லை.....!!

ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டாராம்...

மாநில அளவில் அதிக மதிப்பெண்களை மாணவிகளே அதிகமாகப் பெறுகிறார்களே, என்ன காரணம்?”

ஒரு மாணவன் அலட்டிக்கொள்ளாமல் எழுந்து சொன்னானாம்….

“இதுக்கெல்லாம் வேறு ஒரு காரணமும் இல்லைங்க சார்..
மதிப்”பெண்கள்” என்பதை கொஞ்ச நாளைக்கு மாற்றி,
மதிப்”ஆண்கள்” என்று அழையுங்கள்… சரியாகிவிடும்!”

இன்னொரு மாணவன் இடையில் புகுந்து சொன்னானாம்….

“அப்படியே கல்விக்கடவுள் சரஸ்வதியை வேறு துறைக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு,
ஆம்பிளைக் கடவுளாப் பாத்து அப்பாயிண்மெண்ட் பண்ணுங்க!”

# இப்போ காரணம் பிறியுதுங்களா
பசங்க மேல தப்பில்லை.....!!

What you want to become?

நான் ஸ்கூலில் படிக்கும்போது,

இங்கிலீஷ் டீச்சர் : What you want to become?(நீ என்னவாக விரும்புகிறாய்?)

நான் : I want to become a business man (நான் தொழிலதிபராக விரும்புகிறேன்)

டீச்சர்: அதுக்கு business man சொல்லக்கூடாது,அதற்கான சரியான சொல் entrepreneur.எங்க இப்ப சொல்லு?

நான்: இல்ல நான் பிசினெஸ் பண்ற ஐடியாவை விட்டுட்டேன்.

பூனை

ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.

அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான். ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.

வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது. அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான்.

அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம், இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.

சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.

கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,'' போனை பூனையிடம் கொடு.
எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை !

Rocket

மனைவி;- காரணம் இல்லாம
குடிக்கமாட்டேன்னு சொன்னீங்களே,
இப்போ ஏன் குடிச்சீங்க?????

கணவர்;- Rocket விடுறதுக்கு பாட்டில்
வேணும்னு பையன் கேட்டான் அதான்

மனைவி;-????????

புலி

ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.

அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.

''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.

எலி சொல்லியது, 'சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.'

90 girls

If a man is allowed to select a girl
from 90 girls
.
and
.
.
Even if most beautiful is picked,
.
.
.
There's still the pain of losing
the remaining EIGHTY NINE

அடிப்பாவி..

ஒரு குடும்பம் ஊருக்குக் கிளம்பியது. மனைவி,பெட்டி,படுக்கை,பாத்திரங்கள் என்று ஏகப்பட்ட பொருட்களை தூக்கி வந்தாள்.

அவர்கள் ஒரு வழியாக புகைவண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள். புகைவண்டியில் ஒரே கூட்டம். சாதாரணமாக ஏறுவதே கடினம் என்ற நிலையில் இவ்வளவு பொருட்களுடன் எப்படி ஏறுவது?

கணவன் அப்போது கோபமாக ,''வீட்டிலுள்ள இரும்பு பீரோவையும் நீ தூக்கி வந்திருக்கலாம். அதை எப்படி வீட்டில் விட்டு வந்தாய்? என்றான்.

மனைவி அமைதியாக சொன்னாள் ,''நீங்க சொல்வதும் சரிதான். இரும்பு பீரோவையும் தூக்கி வந்திருக்கலாம்.

ஏனெனில் அதிதான் இன்றைய பிரயாணத்துக்கான டிக்கெட்டுகளை வைத்துள்ளேன்.''

அடிப்பாவி..

இறந்து விட்டான்

ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, "இறந்து விட்டான்" என்று சொன்னார்.

அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, "டாக்டர்... நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றான்.

அருகிலிருந்த அவனுடைய மனைவி, "பேசாமல் இருங்க... டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது" என்றாள்...!

Friday, September 13, 2013

யமஹா பைக்

நம்மாளு ஒருத்தன் புதுசா ஒரு யமஹா பைக்
வாங்கி டெலிவரி எடுத்துகிட்டு ரோட்டுல வந்தான்,


அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட
பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு...

அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன்,

"முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?"அப்படின்னு
கேட்டான்.

அவரு நெனச்சாரு,

"என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே" அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு..

நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்

"முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?"அப்படின்னு
கேட்டான்.

அவரு இது என்னடா லூசு அப்படின்னு பதில் சொல்லாம
வேகத்த கொறச்சிகிட்டாறு...

ஆனா நம்மாளு அதே வேகத்துலமுன்னாடி போய்ட்டான்...

ஒரு 10 நிமிஷம் கழிச்சி பெர்ராரில போனவரு ஒரு எடத்துல ரோட்டோரம் கூட்டாமா மக்கள் நிக்கிறத பார்த்து ஒரு
ஆர்வத்துல வண்டிய ஓரம் கட்டிட்டு வந்து பார்த்தாரு..

பார்த்தா நம்ம யமஹா பைக்வந்தவன் விழுந்து வாரிகிட்டு நொறுங்கிபோய் கிடந்தான்..

அவ்வளவு சேதாரத்துலயும் காருக்காரர அடையாளம் பார்த்து சொன்னான்,

"நான் தான் "முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா அப்படின்னு கேட்டானே.. தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அதுல ப்ரேக்கு எங்க இருக்குன்னு கேட்டு அத பயன்படுத்தி வண்டிய நிறுத்தி இருப்பேன்..இவ்வளவு அடி பட்டுருக்காதே"

Wednesday, September 11, 2013

அதிசய டாக்டர்

ஒரு ஊர்ல ஒரு ஆளு நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்..

அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..

எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு..

நம்ம ஆளு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்

பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி

” டாக்டர்அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..

எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.

அப்புறம் உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு..

அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு நம்ம ஆளு வாய்க்குள்ள அப்புனாரு..

நம்ம ஆளு கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.

” அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!

நம்ம ஆளு அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே

திரும்பிட்டாரு..

இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி

” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு

இப்பஅதிசய டாக்டருக்கு குழப்பம்.

என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.

.என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.

. நம்ம ஆளு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”

ன்னாரு..

அப்ப கெளம்பி ஓடுனவர்தான்.... நம்ம ஆளு எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே….!

Tuesday, September 10, 2013

நான் தான் பேய்!!

ஒரு நடு இராத்திரிப் பொழுதில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள் மனைவியானவள்.

பேய் போன்று, தன்னை உருவகப்படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின் பின்னே ஒழிந்திருந்தாள்.

கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள்.

கணவன் (எந்தவிதப் பயமும் இன்றி) : யார் நீ

மனைவி: நான் தான் பேய்!!

கணவன்: ஓ அப்படியா.....

நல்லது என் கூட வீட்டுக்கு வா.....

உங்க அக்கா ஒருத்தியை தான் நான் கல்யாணம் செஞ்சிருக்கேன்......

மனைவி : அவள் தன் உண்மை நிலை உணர்ந்து மயக்கமுற்றாள்....

Double heart attack

Double heart attack message by a girl to a boy:
.
.
.
1st Msg:" Lets break up now, its all over..
.
.
.
2nd Msg:" Sorry, Sorry, Sorry! That
was not for you

அதுக்குள்ளே அங்க ரீச் ஆயிட்டியா நீ

செத்துப்போன பொண்டாட்டிக்கு இறுதிக்காரியம் பண்ணிட்டு வீடு திரும்பிட்டு இருந்தார் ஒருத்தர்.

அப்போ திடீர்னு வானத்துல இடி இடிசுதாம், மின்னல் வெட்டிச்சாம். உடனே நம்ம ஆளு மேல பாத்து சொன்னானாம்
*
*
*
*
*
"அதுக்குள்ளே அங்க ரீச் ஆயிட்டியா நீ"

Wife

Police Officer: I arrest people, But,
when I go home, I'm under house arrest, by Wife

Professor: I give lectures to students,
But, when I go home, I get Lectured hourly, from wife

CEO: I'm the Boss, But, when I go
home, I always feel like an employee, of my wife

Judge: I give Justice, but when I go home, I Beg for
Justice, from my wife

கையில அடிபட்டிச்சு

ஸ்கூலில் இருந்து ஒரு பையன் கையில் கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தான்

என்னாப்பா என்ன பிரச்சனை ?

கையில அடிபட்டிச்சு.

சரி காட்டு என்று கட்டுப்போட்ட கையைத் தொட்டார்.

இல்ல டாக்டர், இந்த கை. மாற்றிக்காட்டினான் ? டாக்டருக்கு குழப்பம்.

என்னப்பா வலது கையில தான கட்டுபோட்டிருக்க.

இல்ல டாக்டர் இடது கைதான். இந்த பசங்களைப்பற்றி உங்களுக்கு தெரியாது எந்த கையில அடிபட்டுச்சோ அந்த கைமேலெயே விழுவானுங்க. அதுக்குதான் கட்ட மாத்தி போட்டிருக்கேன்.

யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்…!!

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?”

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.

அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.

சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.

சொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க
எண்ணி அவ்வாறு செய்தேன்”

இளைஞன் உரக்கச் சொன்னான்”என்ன?ஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா?மிக அதிகம்”

இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.

அவள் குறுகிப் போனாள்.


அவன் சொன்னான்”நான் ஒரு
வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்…!!

Friday, September 6, 2013

ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?

உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி Mr. தானா கீனா கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தார். கடவுளே.. .

என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவர் கேட்டார் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.

எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?

லேசான நகைப்போடு இவர் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது.....

அப்போது தானே அவள் உன்னைக் காதலிப்பாள்!!!

OMG

Husband sent a text to his wife at night,

“Hi I will get late, please try and wash all my dirty clothes and make sure you prepare my favorite dish before I return.”

She didnt reply..

He sent another text,

“And I forgot to tell you that I got an increase in my salary at the end of the month I’m getting you a new car”

She text back, “OMG really?”

Husband replied,
“No I just wanted to make sure you got my first message”.

15 மாடி

நாராயணசாமி ஒரு நவீனமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்.

அதை வீட்டில் பொருத்தி, செய்முறை விளக்கம் கொடுக்க ஒரு ஊழியரும் வந்திருந்தார்.

தங்கள் நிறுவன தொலைக்காட்சி பெட்டியின் சிறப்பை ஓயாது வர்ணித்த ஊழியர், பின் ரிமோட்டை எடுத்தார்.

அதை நாராயணசாமியிடம் காட்டிய ஊழியர்,

"இது மிகவும் நுட்பமானது. இதன் வீச்சும் திறனும் மிக அதிகம். வாருங்கள் காட்டுகிறேன்" என்று சொல்லி, பக்கத்தில் இருந்த 15 மாடிக்கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்துப் போனார்.

அங்கிருந்து ரிமோட்டை இயக்க, நாராயணசாமியின் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி மிக அழகாக இயங்கியது.

நாராயணசாமிக்கு பரம திருப்தி..

ஒரு மாதம் கழித்து தொலைக்காட்சி பெட்டி நிறுவனத்துக்கு போன் செய்த நாராயணசாமி சொன்னார்,

"தயவு செய்து எனக்கு ரிமோட் மாற்றிக் கொடுங்கள்.. ஒவ்வொருமுறை சேனல் மாற்றவும் 15 மாடிகள் ஏறி இறங்க என்னால் முடியவில்லை.. இதனால், அந்தக் கட்டிடத்தின் வாட்ச் மேனுடன் வேறு சண்டை வந்துவிட்டது..!"

50-50

Two girls found Rs 1000 on road
.
.
.
.
. .
Girl 1 : what to do with this
money now?
.
.
.
. .
.
.
Girl 2 : lets take 50-50
.
. .
.
.
.
.
Girl1 : okay but wat about other
900.

Wednesday, September 4, 2013

மந்திரி

ராதா: உன் புருஷன் மந்திரியா இருந்தாலும் இன்னும் ஏன் பாய்ல படுக்கறார்?

கீதா: அவருக்கு காலைல ஏந்திருக்கும் போதே ஏதாவது சுருட்டணும்...

சில உண்மையை மறைத்து

விவாகரத்து கோருபவர் நீதிபதியிடம்...

''சில உண்மையை மறைத்து இந்த பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க..அதனாலே விவாகரத்து வேணுங்க
ஐயா..''

நீதிபதி,,,,

''அப்படி என்ன உண்மையை மறைச்சாங்க..?''

விவகாரத்துகோருபவர்.....

''பெண்ணுக்கு...காரத்தே......குங்பூ....இதெல்லாம் தெரியும்னு சொல்லவே இல்லை....''

வெறும் வயித்துல

டாக்டர் : இந்த மருந்தை வெறும் வயித்துல தினமும் காலையிலே சாப்பிடுங்க‌

நோயாளி : பனியன் கூட போட்டிருக்கக்கூடாத டாக்டர்

டாக்டர் : !!!???

ஆயிரம் பொற்காசுகள்

ஒரு குட்டி கதை:

ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?

கேபிள் டிவி நிறுவனத்துக்கு நம்ம நாராயணசாமி வேலை கேட்டு போனார்.. இன்னும் ஒரு ஆளும் வந்திருந்தார்.. ஆனால் இருந்ததோ ஒரே ஒரு வேலை.. முதலாளி இருவரில் யார் ஒரே நாளில் அதிகமான கேபிள் கம்பங்களை புதைக்கிறார்களோ அவருக்குதான் அந்த வேலை என்றார்..

மாலை இருவரும் களைப்படைந்து திரும்பினார்கள்..
முதலாளி இன்னொருவரைக் கேட்டார்..” எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?”

அவர் “25 கம்பங்கள்” என்று பதிலளித்தார்..
நாராயணசாமிக் கேட்க, அவர் “5″ என்றார். முதலாளி வியப்படைந்து..

” என்ன..? வெறும் 5 தானா..? இவர் எத்தனை தெரியுமா..?

” அடப் போங்க முதலாளி.. எல்லா கம்பமும் முக்கால் வாசி வெளியிலே தெரியறாப்பல புதைச்சிட்டு வந்துருக்காரு… போய்ப் பாருங்க..!!

Monday, September 2, 2013

கடையில் வேலைக்குச் சேர்த்தது ரொம்பவும் தப்பாப் போச்?

“”ஹோட்டலில் வேலை செய்தவரை பூச்சி மருந்துக்

கடையில் வேலைக்குச் சேர்த்தது ரொம்பவும் தப்பாப் போச்சோ?”

“”ஏன்?”

“”யாராவது பூச்சி மருந்து கேட்டால்… சாப்பிடவா? பார்சலா?ன்னு கேட்கிறார்”