Tuesday, December 27, 2011

நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.



ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

"அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான ப்ளாக்கிற்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் கொண்டிருக்கும் இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

வங்கிக் கொள்ளை - நகைச்சுவை

ஒருமுறை டெல்லியின் திகார் சிறையிலிருந்து தப்பித்த இரண்டு கொள்ளையர்கள் உடனடியாக ஒரு கொள்ளையை அதே இரவில் நடத்தத் திட்டமிட்டனர். அவர்கள் தயாரித்த திட்டப்படி அந்த வங்கிக்குச் சென்றபோது திடீரென தெரு விளக்குகள் அணைந்துவிட்டது. ஒருவழியாக தேடிக்கண்டுபிடித்து வங்கியை அடைந்தனர். வங்கியின் உள்ளே பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைத்தனர். கேமராவிற்குச் செல்லும் ஒயரைத் துண்டித்தனர்.


பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிக்க சேப்டி லாக்கரைத் தேடிக் கண்டுபிடித்தனர். அவர்கள் ஒரு பத்து சேப்டி லாக்கர் மட்டுமே இருக்கும் என நினைத்திருந்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான சிறிய சேப்டி லாக்கர்கள் இருந்தன. அவர்களுக்கு ஒரே சந்தோசம். “இதை மட்டும் கொள்ளையடித்தால்போதும் வாழ்நாள் முழுதும் வேறு எதுவும் தேவை இல்லை” என்றான் ஒருவன்.



கொள்ளையர்கள் முதல் சேப்டி லாக்கரின் பூட்டை உடைத்தனர். உள்ளே கண்ணாடி பாட்டிலில் ஒரு வெண்ணிற பால் போன்ற திரவம் மட்டுமே இருந்தது. மீண்டும் அடுத்த சேப்டி லாக்கரின் பூட்டையும் உடைத்தனர், ஆனால் அதிலும் அதுவே இருந்தது. மேலும் பத்து சேப்டி லாக்கரை உடைத்தும் ஏமாற்றமே மிஞ்சியது.


கோபத்தில் அனைத்துக் கண்ணாடி பாட்டில்களையும் உடைத்தனர். அதன் வாசத்தால் அவர்களுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. ஒரு கிராம் தங்கம் கூட கிடைக்காத விரக்தியிலும், துர்நாற்றத்தாலும் உடனே அங்கிருந்து கிளம்பினர்.


அடுத்த நாள் செய்தித்தாள் தலைப்பு:


டெல்லியின் மிகப்பெரிய விந்தணுவங்கியில் கொள்ளை!...

வடிவேலு VS சிங்கமுத்து

மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்து, வழியில் சென்னைக்கு அருகே காலை உணவிற்காக நிறுத்தப்படுகிறது. அருகிலிருந்த ஹோட்டலுக்குச் செல்கிறார் வடிவேலு. அங்கு டிஷர்ட் அணிந்து டையுடன் “வாங்க சார்! வாங்க” என்கிறார் சர்வர் சிங்கமுத்து.

சிங்கமுத்து : சார் என்ன சாப்புடுறீங்க??

வடிவேலு : (ஒரு டைப்பா இருக்கானே) முதல்ல மெனு கொடு.

சிங்கமுத்து : தொட்டுக்கரதுக்கு என்ன வேணும்?

வடிவேலு : ஷிட்!

சிங்கமுத்து: அதெல்லாம் இங்க கிடைக்காது.

வடிவேலு : (ஆஹா காலையிலேயே ஆரம்பிச்சுட்டானே - எங்ககிட்டயேவா என நினைத்துக்கொண்டு) யோவ் உங்க ஊர்ல இதைதான் சாப்புடுவீங்களா?? சரி ஒரு பிளேட் இட்லி வடை, ஒரு தோசை, ஒரு காப்பி கொண்டு வா, அப்புறம் 20இட்லி, 25தோசை 2லிட்டர் பெப்சி ஒரு 10 பார்சல் பண்ணி சீக்கிரம் கொண்டு வா.

சிங்கமுத்து: ஒ! அப்படியா சங்கதி! (கல்யாணத்துக்கு வாங்கிட்டு போறானோ??)





(அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு பார்சலை வாங்கிக்கொண்டு கிளம்புகிறார் வடிவேலு)


சிங்கமுத்து : சார் சார் பில்லை வாங்காம போறீங்களே?? இந்தாங்க பில்!


வடிவேலு : இதை நான் ஆர்டர் பண்ணவே இல்லியே!


சிங்கமுத்து: என்னது ஆர்டர் பண்ணலயா? சார் எதோ மொதல்ல தெரியாம பேசிட்டேன், என்னோட சம்பளத்துல புடிச்சுருவாங்க சார்!


வடிவேலு : இதுக்குத்தான்! வர்றவன் யாரு? எப்படிப்பட்ட ரவுடின்னு தெரியாம விளாண்டா இப்படித்தான்!!! பஸ்சு கிளம்பிடுச்சு. போலாம் ரைட்!!


சிங்கமுத்து : அவனேதான் இவன். அவனேதான் இவன்! டேய் எனக்கு இந்த வேலையும் வேணாம், ஒன்னும் வேணாம். நான் கிளம்புறேன் மதுரைக்கு!! இவன் இருக்கிற ஊர்ல நான் இருக்க மாட்டேன்!

காதலியின் அதிர்ஷ்டம் – நகைச்சுவை

காலையில் அவரது நடைபயிற்சியின்போது திடீரென எதிரே வந்த ஒரு பைக் அவர்மீது மோதியது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் இரண்டு நாட்கள் கோமாவில் இருக்கும் நிலை ஏற்பட்டது. கண்களை திறந்து பார்த்தபோது, அவரது காதலி தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அவர் “பல்கலைக்கழகத்தில் என் ஆய்வுகள் என போராடிக்கொண்டு இருந்த போது, நான் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தேன் (கண்களில் கண்ணீர்) அப்போது நீ என்னுடன் இருந்து என் முயற்சியை ஊக்குவித்தாய்"

தொடர்ந்து அவர் "நான் என்னுடைய வேலைக்கான நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்தபோது, நீ என்னுடன் இருந்து மற்ற வேலைகளுக்கான விளம்பரங்கள் வெட்டி, அவைகளுக்கு விண்ணப்பிக்க உதவி செய்தாய்"
தன் காதலியின் கைகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார். பின் "நான் ஒரு சிறிய நிறுவனத்தைத் தொடங்கி இறுதியாக ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைத்தது. அப்போது நடந்த ஒரு சிறிய தவறால் அது கிடைக்காமல் போனது அப்போதும்கூட நீ எனக்குத் துணையாக இருந்தாய்."

காதலியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. மேலும் அவர் “இறுதியாக எனது நிறுவனம் மூடப்பட்ட பின் எனக்கு ஒரு வேலை கிடைத்தது ஆனால் அங்கு எனது கடின உழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நான் இன்னும் அங்கு சேர்ந்த அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன், அதேபோல் நீயும் என்னுடன் இருக்கிறாய்"

அவள் அவனை கவனிக்கக்கூட சக்தியில்லாமல் கீழே பார்த்துக் கொண்டே கூறினாள், "நீங்கள் கூறுவதும் சரிதான், உண்மையில் நீங்கள் சொல்வது போல நமக்குள் ஏதோ இருக்கிறது" என்று புலம்பினாள்.

இறுதியாக அவர் சொன்னார்,

"உன்னுடைய துரதிர்ஷ்டம்தான் என்னைத் துரத்துகிறது என நான் நினைக்கிறேன்.!

சர்தார்ஜியும் கொள்ளைக்காரர்களும்!

கொள்ளையர்கள் ஒரு வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டு அனைத்து போன் ஒயர்களையும் துண்டித்துவிட்டு வங்கியின் உள்ளே நுழைந்தனர். உடனே அங்கிருக்கும் அனைவரையும் ஓரமாக நிற்க வைத்துவிட்டு கேஷியரிடம் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டனர். மற்றவர்கள் ஒரு சுவர் ஓரமாக பயத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

உடனே கொள்ளையர் தலைவன் “இங்கிருக்கும் அனைவரிடம் இருந்தும் செல்போன், நகை, பணத்தை பிடிங்கிக்கொள்ளுங்கள்” என்று ஆணையிட்டான்!


அப்போது யாருக்கும் தெரியாமல் அங்கு வேலை செய்யும் சர்தார்ஜி அந்த வங்கியின் மேனேஜரிடம் ஒரு கவரைக் கொடுத்தார்.



மேனேஜர் மெதுவாக "என்ன இது???”



சர்தார்ஜி சொன்னார், ”நான் உங்களுக்கு திருப்பி தரவேண்டிய கடன் 5000ருபாய் இதில் உள்ளது.”

மனைவியின் சந்தேக புத்தி!

ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாக ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள். இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.

திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள் விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லி குளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்ற போதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச் சென்றுவிட்டார்..

மனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனே விளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்து எதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.
.
உடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக்கைப் போட்டாள்.


“இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்!

நகைச்சுவைக் கவிதைகள்!

நட்சத்திர உணவகம்,
நட்சத்திரமாய் அவள்.
இருவரும் கண்களால்
கவனித்துக் கொண்டோம்
மௌனப் பார்வையால்
பேசிவிட்டுக் கேட்டாள்;
"சார்! என்ன சாப்புடுறீங்க?"

நகைச்சுவைக் கவிதைகள்!

நான் கனவுகளை வெறுக்கிறேன்
காரணம்
நீ வருவதால் அல்ல;
உன்னுடன் இன்னொருவன் வருவதால்!

நகைச்சுவைக் கவிதைகள்!

யானையின் உடல்
பன்றியின் முகம்
கழுதையின் குரல்
கரடியின் கைகள்
குரங்கின் புன்னகை
என்றெல்லாம் விளித்திருப்பேன்;
நீ மட்டும்
என் காதலியாய் இல்லாமலிருந்திருந்தால்!

Thursday, December 8, 2011

population is less

Tiger: Dis bloody Discovery channel people
are very irritating.
Monkey: why? What happend?
Tiger: they wont give any privacy nd
then say Tiger population is less.....??

DIRECT MARKETING

Managment student kisses a girl.

Girl-whats this?

Boy- its called DIRECT MARKETING.

Girl slaps d boy

Boy-what is this?

Girl- this is CUSTOMER FEED BACK...

நாய் நக்கிய இலை.......

ஹோட்டல் ஒன்றில் நானும் என் நண்பர் ஒருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். இலையில் கொஞ்சம் சாப்பாட்டை மிச்சம் வைத்துவிட்டு எழுந்துவிட்டார் அந்த நண்பர்.

ஏன் சாப்பாட்டை மிச்சம் வைத்துவிட்டீர்...பிடிக்கலியா? என்றேன் நான்

இல்லை. இப்போது நாம் சாப்பிட்ட எச்சில் இலையை பக்கத்தில் இருக்கும் குப்பைத்தொட்டியில் போடுவர்கள் இல்லையா....அப்போது மிச்சமிருக்கும் சாப்பாட்டை ஏதாவது ஒரு நாய் சாப்பிடவரும்.....என்றார் நண்பர்.

ஓ.... நாயிக்கு கொஞ்சம் சாப்பாடு கிடைக்கட்டுமேன்னு நல்ல எண்ணத்தில் மிச்சம் வச்சிட்டீங்க....அப்படித்தானே? என்று கேட்டேன் நான்

அதுதான் இல்லை. அப்படி நாய் சாப்பிட வரும்போது நாம் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விட்டு இலையை சுத்தமாக வைத்திருந்தால் நாய் என்ன நினைக்கும்ன்னு தெரியுமா? என்று கேட்டார்.

என்ன நினைக்கும்? என்றேன் புரியாமல்....

இதுக்கு முன்னாடி இந்த இலையை எந்த நாய் நக்குச்சோன்னு நினைக்குமாம்....இதுக்கு முன்னாடி நம்ம தான அந்த இலையில் சாப்பிட்டோம்...எதுக்கு நாயிட்ட நாம நாயின்னு பேரு வாங்கனும்? அதான் கொஞ்சம் மிச்சம் வச்சுட்டேன் என்றார் நகைச்சுவையாக....

அதுசரி என்றேன் சிரித்துக்கொண்டே....

Height Of Social Networking:

Teacher: Where Is Your Homework?

Boy: Madam, Please Check In FACEBOOK,

I Have Uploaded A Copy Of It & Tagged You..

Enna Vaangi Tharuvinga?

Son: mom, Examla pas panni degree
vaangina Enna Vaangi Tharuvinga?

mom: APACHE BIKE, E7 MOBILE...

Son:Adhan ma Ungalukku Selavu Vaika koodadhunu Fail ahitan..

by: kudumba kastatha purinju kitu
poruppa nadakum nalla pasanga.....