Thursday, August 29, 2013

Renduliam Limit thaandinal

Love'Kum Food'kum 
Oru Vithyasam
Enna theriyuma??

Renduliam Limit thaandinal

VOMIT THAN 

Ithu Yosikka Vendiya Time:

Ithu Yosikka Vendiya Time: 
Girls
Rakki katti Brother’s day kondadumpothu,
Boys yen
Thaali katti husband day kondada kudathu?

Yosinga..

ATM machine'la

Senthil:
Annae, ATM machine'la visiting card'da potta 
ennoda PANAM varuma 'nae?
Gounds:
Indha maari kelvi'ya innoru murai kaetta,

unnoda PONAM dhan varum

Naan solara thannila neechal adipiya?

Parthiban: Naan solara thannila neechal adipiya?

Vadivelu: Naan evlo periya neechal veeran theriuma??

Parthiben: Intha tumler thannila neechal adi pakkalam


Vadivelu: Ennaathuu!!???

Cow'ukum Love'kum

Cow'ukum Love'kum
orai oru similarity

Cow paal KUDUKUM
Loveuuu Paal OOTHUM!!

credit card

Orutharukku Bank-la irunthu notice vanthuchu…
“Sir, Ungaloda credit card thriuttu poi irukku…aanal, neenga innum oru report kooda kudukkalayea yen sir???”
Atharkku antha Person-oda reply…
“Athu thiruttu ponathu romba sandhosamdhanga….
Yen-na andha thirudan ennoda wife-i vida limit-ta dhan Selavu panran...”

Monday, August 26, 2013

அவை என்ன மிருகங்கள்..?

ஐ.நா.சபையின் நல்லெண்ணப் பயணமாக ஒரு அமெரிக்க விவசாயி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அங்கு ஒரு ஆஸ்திரேலிய விவசாயியை சந்திக்க, அவர் தன் பெரிய கோதுமை வயலைச் சுற்றிக் காட்டினார். உடன் தங்களுக்கே உரிய அலட்டல் தன்மையுடன் அமெரிக்கர் சொன்னார்.. "

என்னுடைய பண்ணை இதைவிட நான்கு மடங்கு பெரியது..!"

அடுத்து தன் மாட்டுப் பண்ணையை ஆஸ்திரேலியர் காட்ட, அமெரிக்கர்..

" என் மாடுகளின் கொம்புகள் உங்கள் மாடுகளைப் போல் இருமடங்கு பெரிதாக இருக்கும்..!"

அவர்கள் நகருக்கு திரும்பும்போது திமு திமுவென கங்காருகள் குதித்து ஓடுவதைப் பார்த்து மிரண்டு போன அமேரிக்கர் கேட்டார்..

" அவை என்ன மிருகங்கள்..?"

வாய்ப்புக்கு காத்திருந்த ஆஸ்திரேலியர் பதிலடி கொடுத்தார்...

" ஏன் உங்க நாட்டில் நீ சுண்டெலிகளைப் பார்த்ததில்லையோ..?"

இது எப்புடி இருக்கு...!

ஒரு ஜெர்மானியர், ஒரு பாகிஸ்தானியர், ஒ­
ரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக்
கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க
உத்தரவிடப் பட்டது.
ஆனால்,அதற்கு முன் அவர்கள்
வேண்டுவது ஒன்று செய்யப்படும் எனச்
சொல்லப்பட்டது.
ஜெர்மானியன் தன் முதுகில்
ஒரு தலையணை கட்டச் சொல்லிக்
கேட்டான்.பத்து அடியில்
தலையணை கிழிந்து அவன் பலமான
காயத்துக்கு ஆளானான்.
பாகிஸ்தானி தன் முதுகில்
இருதலையணை கட்டச் சொன்னான்;
பதினைந்து அடியில்
தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.
மூன்றாவது இந்தியன்., ஷேக் சொன்னார் ”எனக்கு
இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ
இரண்டு வேண்டியவை கேட்கலாம்"
இந்தியன் கேட்டான். ”எனக்கு 30க்குப் பதில் 50
கசையடி வேண்டும்”
ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார்.
அடுத்தது”…
”இந்தப் பாகிஸ்தான்காரரை என் முதுகில்
கட்டுங்கள்!”
இது எப்புடி இருக்கு...!

Which machine can I use ?

A man asks a trainer in the gym :
.
.
.
.
"I want to impress that beautiful girl,
.
.
.
.
Which machine can I use ?"
.
.
.
.
The trainer replied; “Use the ATM outside the gym!!!"

“இல்லை மேடம்”

ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாக ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள். இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள் விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லி குளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்ற போதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச் சென்றுவிட்டார்..மனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனே விளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்து எதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்..உடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக்கைப் போட்டாள்.“இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்!..

ஆட்டிறைச்சிக் கடை

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வொருநாளும்,
கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.
அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்க
வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான்.
கடையை மூடப்போகும் சமயம், அத்திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?"
என்று வழக்கம் போலக் கேட்டான். அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை" என்றான்.
திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!

Tuesday, August 13, 2013

# டெரர் பசங்க...

அப்பா: இன்னைக்கு லீவ் தானே அப்புறம் என்ன படிக்கிறே?

மகன் : குழந்தை வளர்ப்பது எப்படிங்கிற புக் படிக்கிறேன்.

அப்பா : நீ சின்னப் பையன்தானே அதை ஏன் நீ படிக்கிறே?

மகன் : நீங்க ஒழுங்காக என்னை வளர்க்கிறீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான். …

Monday, August 12, 2013

அடையாள அட்டையை எடுத்து அதனிடம் காட்டுங்கள்


தேசிய நெடுஞ்சாலைப் பணியாளர் ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
"உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்'' என்றார்.

"சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்'' என்றார் விவசாயி.
"நான் நெடுஞ்சாலைத் துறைப் பணியாள். எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் கொடுத்தது'' என்றார் பணியாளர்.

"அதற்கு மேல் உங்கள் விருப்பம்'' என்று கூறிய விவசாயி பேசாமல் வயல் வரப்பில் அமர்ந்தார்.

வயலுக்குள் சென்ற பணியாளர் சிறிது நேரத்துக்கு எல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். அவருக்குப் பின்னால், முரட்டுக்காளை ஒன்று துரத்தி வந்ததை விவசாயி பார்த்தார். தன்னைக் காப்பாற்றும்படி அலறிய பணியாளரிடம் விவசாயி சொன்னார்:

"சீக்கிரமாக உங்கள் அடையாள அட்டையை எடுத்து அதனிடம் காட்டுங்கள்''

ஹலோ சூரியன் FM

ஹலோ சூரியன் FM
வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன்
பேசுறேன்..!!

சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??

என் பொண்டாட்டி என் கூட
சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள
இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..

அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என்
வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க...

திருட்டுப் போச்சு

நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...

நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!

அஞ்சு நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?

ஆண்: என்னோட மனைவியைக் காணோம்..ஒரு அஞ்சு

நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?

பெண்: எதுக்கு?

ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!

பாம்பு

ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!

மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?

போலி டாக்டர்

நண்பர் 1: ""அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''

நண்பர் 2: ""எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''

உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்

தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...

மகன்: ஃபெயிலாயிட்டா..?

தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!

அது ஒரு விடுமுறை நாள்.

அது ஒரு விடுமுறை நாள். 

சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன்.

குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது. மனைவியை கூப்பிட்டான்.

“குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ?

“இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.”

“இல்ல இப்ப அழுதுச்சே...”

உள்ளே இருந்து மனைவி சொன்னாள்.....

“நான்தேன் பாடிட்டு இருக்கேன்”

என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாரு

"இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர் என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாரு''

"வெரி குட்.....அப்புறம்?''

"அப்புறமென்ன‌ .. என் கொலுசைக் காணோம்''

பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே?

ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?

நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்

சொன்னா புரியாது

அவன் : சரிமா நான் படத்துக்கு போறேன் சாயங்காலம் வந்து பேசுறேன்.

அவள் : என்ன படத்துக்கு போற?

அவன் :"சொன்னா புரியாது"

அவள் :அதெல்லாம் நான் புரிஞ்சுகுறேன் சொல்லு.

அவன் :ஏ படம் பேருதான் சொன்னா புரியாது.

அவன் :இப்போ சொல்லுவியா? மாட்டியா?

அவன் :சொன்னா புரியாது.

அவள் :ச்ச என்ட கூட மறைக்கிற போனை வை.

அவன் :அட ச்சீ,வைடி போனை.

நீதி: இந்த மாதிரி லூசுகளால் தான் பாதி காதல் பாதில முடியுது

Thursday, August 8, 2013

எனக்கு சாவே வரக்கூடாது

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்....

"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".

"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்ஃ

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...

இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"

பாவம்... அவநுக்கு 'சா' வே வரல!

மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?

கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்..
மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்..
ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . .
.
"ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?"
.
இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..
.
"கிழட்டு மாடுகளுடன் கூட சகவாசமா..? வெட்க ­மா இல்லே..?"
.
மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..
.
"அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?"

.
# எப்படி டி உங்க கூட வாழுறது....  

சுமை .....

சுமை .....

ஒரு காட்டின் வழியே இரண்டு துறவிகள் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியில் ஆறு ஒன்று குறுக்கே இருந்தது. அவர்கள் அந்த ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர். 

அந்த நேரம் ஒரு இளம் பெண் ஆற்றை கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் துறவியிடம் "என்னை மறுகரைக்கு கொண்டு சேர்க்க முடியுமா?" என்று கேட்டாள். ஆனால் அவர்களில் ஒரு துறவி மிகவும் தயங்கினார். மற்றவர் தயங்காமல், அந்த பெண்ணை தன் தோள் மீது தூக்கிச் சென்று, மறுகரையில் இறக்கினார். மறுகரை சேர்ந்ததும் அந்த பெண் துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவர்களும் தங்கள் பயணத்தை தொடங்கினர். சற்று நேரம் கழித்து, உதவி செய்ய தயங்கிய துறவி மற்றொருவரிடம் "நம் புத்த மதக் கொள்கையின் படி, துறவியான பின் எந்த பெண்ணையும் தொடக்கூடாது தானே? ஆனால் நீங்கள் ஏன் அந்த பெண்ணை தொட்டு தூக்கி மறுகரையில் இறக்கினீர்? அது தவறல்லவா?" என்று கேட்டார்.

அதற்கு உதவி செய்த துறவி சொன்னார், "நான் அந்த பெண்ணை தூக்கி கரையிலேயே இறக்கிவிட்டேன். நீங்கள் தான் இன்னும் அதனை சுமக்கிறீர்கள்" என்று புன்னகையுடன் சொன்னார். 

(ஒரு டாஸ்மாக் பாரில்)

(ஒரு டாஸ்மாக் பாரில்)

“தம்பி!! ஒரு பீர்!”

“என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?”

“அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”

“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”

“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”

“போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”

“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”

குற்றவாளியை கண்டுபிடிக்கணும்.

ஒரு இளம் பெண் காவல்துறையில் வேலை செய்ய ஆசைப்பட்டு நேர்முக தேர்வுக்கு செல்கிறாள்

அதிகாரி: 2+2 
பெண்: ம்ம்ம்... 4
அதிகாரி:அமெரிக்க யனாதிபதி யார்?
பெண்:ம்ம்ம்.. பராக் ஒபாமா
அதிகாரி:வெரி குட்,மகாத்மா காந்தியை கொன்றது யார்?
பெண்:ம்ம்ம்...தெரியல சார்
அதிகாரி:சரி நீங்கள் வீட்டுக்குபோய் யோசித்துவிட்டு நாளை வந்து சொல்லுங்க

அந்த பெண் வீட்டுக்கு சென்றதும் நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது

நண்பி: நேர்முக தேர்வுக்கு சென்றியே,வேலை கிடைத்ததா??
பெண்: (உற்சாகமாக) ஆம் வேலை கிடைத்துவிட்டது. முதல் வேலையே ஒரு கொலை கேஷ். 24 மணித்தியாலத்துகுள்ள குற்றவாளியை கண்டுபிடிக்கணும்.

உச்சக்கட்ட மானபங்கம்



ஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்ப
போன் வந்துச்சி ...

பார்த்தா புது நம்பர்...

யாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்...

" Hello... யாரு? ! "ன்னேன்.

" நான் யாருங்குறது இருக்கட்டும் ... உங்க ஆபிசுல A.C Work
பண்ணுதா.? "ன்னு கேட்டான்.

"பண்ணுதே.. ! "ன்னேன் நான்

" Computer Work பண்ணுதா.?" ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.

" அதுவும் Work பண்ணுதே.! "ன்னேன் நான்.
அதுக்கு அந்த நாதாரி சொல்லுது,

" அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone
பேசிட்டு இருக்கீங்க..? ... நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானே ...!

உலகத்திலேயே படு முட்டாள்

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான்உலகத்திலேயே படு முட்டாள்’ னு.

மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.

‘சொல்லுங்கைய்யாஎன்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க.

ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம்.

அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

இரண்டாம் உலகப் போர்

1957ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு மனிதன்
பாவ மன்னிப்புக்
கோரி சர்ச்சுக்கு வந்தான்.
நபர் = "பாதர்... நான் பெரிய பாவம்
செய்துவிட்டேன்
மன்னிப்பு கிடைக்குமா?"
பாதர் - ”சொல் மகனே, என்ன பாவம்
செய்தாய்”
நபர் - “பாதர், இரண்டாம் உலகப் போரின்
போது ஒருவனுக்கு வீட்டில் ஒளிந்துக்
கொள்ள இடம் தந்து விட்டேன்”
பாதர் - “இதொன்றும் பாவமில்லை, நீ
போகலாம்”
நபர் - “பாதர், அவனிடம் ஒளிந்துக் கொள்ள
ஒரு நாளைக்கு 5 டாலர்
வாங்கி விட்டேனே? “
பாதர் - “இது பாவம் தானென்றாலும்,
அவனைக் காப்பாற்றத்தானே
அவ்வாறு செய்தாய், உன் பாவம்
மன்னிக்கப்பட்டது”
நபர் - “இப்பத் தான் என் மனம்
அமைதியடைந்தது பாதர்,,, ப்ளீஸ்
இன்னுமொரு கேள்வி”
பாதர் - “சொல் மகனே”
நபர் - “போர்
முடிந்து விட்டதென்று அவனிடம்
சொல்லி விடவா?”

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ?

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ?

படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க.

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

குரங்கு

ஒரு கிராமத்து ஆள் நகரத்துக்கு வந்தார். 

ஒரு வீட்டில்,"கதவைத் தட்டாதீர்கள்.அழைப்பு மணியை அடிக்கவும்"என்று எழுதிய பலகை இருந்தது. அதைப் பார்த்த அவர் அழைப்பு மணியை அடித்தார்.

வீட்டினுள்ளிருந்து ஒருவர் வந்து கதவைத் திறந்து,

"உங்களுக்கு என்ன வேண்டும்?"என்று கேட்டார். 

கிராமத்து ஆளும்,

"எனக்கு ஒன்றும் வேண்டாம்.இதில் அழைப்புமணியை அடிக்கச் சொல்லி இருந்ததால் அடித்தேன்"என்றார்.

வீட்டுக்காரருக்கோ கோபம் வந்து விட்டது. அவர்,

"எனக்குத் தெரியும். இந்தக் குரங்குகளெல்லாம் மரத்துக்கு மரம் தாவித் திரியுமே அந்த கிராமத்தான்தானே நீ ?"என்றார்.

அதற்கு கிராமத்து ஆளோ கொஞ்சம் கூடப் பதட்டமில்லாது சொன்னார்,

"அது பரவாயில்லை, இங்கே நகரத்திலே ஒரு அழைப்பு மணி அடித்தாலே ஒரு குரங்கு வந்து நிற்கிறதே!

“அன்பு என்றால் இதுதான்”.

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியர்.

ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது

. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது

. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.கேட்டபோது சொன்னாள்

, “நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

. குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்

, “அன்பு என்றால் இதுதான்”.

என் பொண்டாட்டிக்கு காது கேக்குறது குறைஞ்சுட்டே வர்ற மாதிரி தெரியுது??

ஒருத்தன் டாக்டர்கிட்ட போய்ட்டு, "டாக்டர்.. வர வர என் பொண்டாட்டிக்கு காது கேக்குறது குறைஞ்சுட்டே வர்ற மாதிரி தெரியுது?? என்ன பண்ணலாம்?? டாக்டர்??"ன்ன்னு கேட்டான்..டாக்டர் சொன்னாரு..

"மொதல்ல ஒரு 15 அடி தூரத்துல இருந்து எதாவது பேசிப்பாரு.. 

அப்பவும் அவ திரும்பலைன்னா, கொஞ்சம் கிட்டப் போய்ட்டு பேசிப்பாரு.. அப்பவும் திரும்பலைன்னா 

அவ பின்னாடி போய்ப் பேசிப்பாரு... 

அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்ன்னு" சொன்னார்..

இவனும் வீட்டுக்கு போய்ட்டு பொண்டாட்டி கிச்சன்ல சமையல் பாத்திரத்தை கழுவிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

கடைசியா அவ பின்னாடி போய் நின்னுட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ சொன்னா...

"நாலாவது முறையா சொல்றேன்.. இன்னிக்கு உப்புமா"ன்னு...! 

அலாவுதீனின் அற்புத விளக்கு

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். 

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது. 

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு,

"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார்.

பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…

"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார்.

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,

"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம்.

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,

"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"

எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?

“உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”

“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா…

அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!” 

அதுவே எனக்கும்..

புதிதாக திருமணமான கணவனும் மனைவியும் ஹோட்டலுக்குச் சென்றனர்.

கணவன் (மனைவியிடம்) 'என்ன சாப்பிடற?''

மனைவி: 'நீங்க என்ன சாப்பிடறீங்களோ, அதுவே எனக்கும்.."

கணவன்; "வெயிட்டர் மெனு கொண்டு வாங்க..!"

மனைவி: (வெட்கத்துடன்) 'நானும் மெனுவே சாப்பிடறேன்..!..?..!"

'இது பேசும் மணி'

'ஒருவர் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரவு மாடியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கு ஒரு மணி கட்டப்பட்டு இருந்தது. 

'எதற்கு இந்த மணி?' என்று கேட்டார் நண்பர்.

'இது பேசும் மணி' என்றார் அவர். 

நண்பருக்கோ ஆச்சர்யம்! 'உண்மையாகவா?' என்று கேட்டார்.

'வேண்டுமானால் அடித்துப் பாருங்கள்' என்றார் அவர். 

நண்பரும் மணியை ஓங்கி அடித்தார். 'யாருடா அவன் 11 மணிக்கு மணியடிச்சு எழுப்புறது?' என்று பக்கத்து மாடியில் இருந்து குரல் வந்தது!''

கையை தடவிப் பார்த்தீங்களாம்..?

டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?

நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

தீப்பெட்டியை

இரும்புப்
பெட்டியை
இரும்புல
செய்வாங்க;
மரப்பெட்டியை
மரத்துல
செய்வாங்க.
அப்ப தீப்பெட்டியை
தீயிலயா
செய்வாங்க?

என் சோக கதையை கேளு...



6 years முன்னாடி, Engineering join பண்ணலாம்னு முடிவு பண்ணி parents கூட ஒரு college க்கு போனேன்...

அங்க, நிறைய professors, parents க்கு college rules, studies, campus interview பற்றிலாம் சொல்லிட்டு இருந்தாங்க..

அதுல ஒருத்தன் சொன்னான், 4 years நல்லா படிச்சு above 75% எடுத்தா campus interview ல select பண்ணிருவாங்க. அப்புறம், starting ல 30 thousand salary, then 40, 60, 1lac னு increase ஆகும். Foreign job,car, own house, beautiful wifeனு life நல்லா இருக்கும். நம்பி உங்க பையனை சேருங்க னு சொன்னாங்க..

அப்போ எனக்கு ஒரு doubt வந்துச்சு... என்னடா 30 thousand salary, foreign job, beautiful wifeனு லாம் சொல்றாங்களே அப்புறம் ஏன் இவங்களாம் 10 thousand salaryல இங்க குப்பை கொட்றாங்க??னு
ஆனா, ஒரு ஆசைல அதலாம் பெருசா கண்டுக்காம சேர்ந்துட்டேன்...

In Mansion...

College Guy after his dating...

In Mansion...

BOy 1: Machi Somehow dating is over nice da wait i ll be right back.

Boy 2: Where r u going da dating is over la...?

Boy 1: Dating is over. But i ve to give back the small things i had borrowed from our friends na...

Boy 2: Oh oh wat r the small things u borrowed da...?

Boy 1: Shirt Room no 11,
Pant Room no 13,
Shoe Room no 17,
Watch Room no 22,
Bike Key Room no 26,
Petrol junior student bike la yaeduthachu
tats all machi

BOy 2: Inners mattum thaan unnodathu nu sollu

Boy 1: Sry machi morning urgent la rope la iruntha unnodatha pottu poittaen nalaiku vangikka.

BOy 2: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஸ்பீட் பிரேக்கர்

ஒருவர் : என்னது அந்தாளு செந்தில் கணக்கா அடி வாங்குறாரு..?

மற்றவர் : ஆளில்லா, ரயில்வே லெவல் கிராசிங்ல ஆக்சிடண்டதடுக்குறதுக்கு ஸ்பீட் பிரேக்கர் போடலாம்னுயோசனை சொன்னாரு..

முதலாமவர் : நல்ல விஷயம்தானே அதுக்கு ஏன் அடிக்குறாங்க ?

மற்றவர் : அவரு சொன்ன ஸ்பீட் பிரேக்கர்... ட்ராக்குல வர்ரரயிலுக்காம்.