Monday, March 16, 2015

இப்ப அவன் ஜெயில்ல இருக்கான்"

நபா்1:- " வாங்க, எப்படி இருக்கீங்க?... மும்பைல வேலை தேடிப்போன உங்க மூத்த பையன் எப்படி இருக்கான்"...?
நபா்2:- "அதை ஏன் கேக்கறீங்க, இப்ப அவன் ஜெயில்ல இருக்கான்"...
நபா்1:- "என்ன சொல்றீங்க? .....அவன் ரொம்ப நல்ல பையனாச்சே... ஒரு வேளை வேலை கிடைக்காத அதிருப்தியில் "கொலை, கொள்ளை, "ன்னு ஏதும் சமூக விரோத கும்பல்ல சிக்கிட்டானா"...?
நபா்2:- "அப்படி ஏதும் தப்பு பண்ணி இருந்தால் கூட மனசு ஆறிப்போயிருக்குமே"!..
நபா்1:- "போலீஸ் புடிச்சுக்கிட்டு போகிற அளவிற்கு அதை விட என்ன பெரிய தப்பு பண்ணினானாம்"...?
நபா்2:- "ஊருக்கு புதுசாச்சுங்களே, மும்பைல ஒரு ஹோட்டல்ல போயி சாப்பிடறதுக்கு "பீஃப்" ஆா்டா் பண்ணி இருக்கான்"!..
நபா்1:-?????????

அட இப்படி கொல்ரானுங்களே!!!


1. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ, அத்தனை இறக்கைதான் இருக்கும்.!
2. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல, அதனால போடுறதில்லை...!
3. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும், கோதுமைய அரைச்சா கோதுமை மாவு வரும்,
அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?
4. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
5. வடச் சட்டில வடை சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டியிலையா ..?
6. மாட்ட, ஆடா மாத்த முடியுமா .?
முடியும் .
ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு
முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா... AADU அப்படின்னு மாறிடும்.!
7. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க,
நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப்போட்டேன் ,
அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?..

Tuesday, March 10, 2015

சிரிக்க மட்டும் ...



ஒரு பெண் குழந்தை இரவு படுக்க போகும் முன் தினமும் சிறிது நேரம் கடவுளை கண் மூடி வேண்டுவாள் .
" கடவுளே என் அப்பா , அம்மா , தாத்தா , பாட்டி எல்லோரையும் குஷியாக வை " என்று வேண்டுவாள் . இதை அவள் தந்தை பெருமையாக கேட்டு மகிழ்வார் .

ஒரு நாள் அவள் " கடவுளே என் அப்பா , அம்மா , பாட்டி எல்லோரையும் குஷியாக வை
தாததா Bye Bye " என்று சொன்னாள் . அப்பா திடுக்கிட்டார் .
அடுத்த நாள் தாத்தா இறந்து விட்டார் ....

சில மாதங்களுக்கு பிறகு இதே கதை பாட்டிக்கும் நடந்தது ......
அப்பா பயந்து நடுங்கி விட்டார் .....

ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவள் "" கடவுளே என்னயும் அம்மாவையும் குஷியாக வை அப்பா Bye Bye " என்றாள் . அடுத்த நாள் பூரா அப்பாவுக்கு ஒரே டென்ஷன் . வேலை எதுவும் ஓடவில்லை. நடுங்கிக்கொண்டே நாள் முழுதும் கழிந்தது . ஆபீசிலிருந்த திரும்பி வந்த மனைவியும் டென்ஷன் ஆக காணப்பட்டார் .
"உனக்கு என்ன ஆச்சு " என்று கேட்டார் அப்பா

" இன்னிக்கு ஆபீஸ்ல எங்க பாஸ் திடீர்னு மயங்கி விழுந்து செத்துட்டார் "

"தலையில ஏன் கட்டு போட்டுருக்கீங்க?"

தலையில் பெரிய கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தார் நம்ம அய்யாசாமி.

"தலையில ஏன் கட்டு போட்டுருக்கீங்க?"

"என் மனைவி வாழைப்பழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா டாக்டர்"

"அதுக்கு உங்க மனைவிதானெ கட்டுபோடணும்... நீங்க ஏன் போட்டுருக்கீங்க?"

"அவள் கீழ விழுந்ததைப் பார்த்து கொஞ்சம் சத்தமா சிரிச்சிட்டேன் டாக்டர்"

பேருந்து நிறுத்தம் ஒன்றில் ...

பேருந்து நிறுத்தம் ஒன்றில் ஒரு கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பேருந்துக்காக வெகு நேரமாய் காத்துக்கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பையை வைத்திருந்தார். அதில் 2 கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒரு கோழி இருந்தது. பேருந்து வந்ததும் அவர் ஓடி சென்று பேருந்தில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு பக்கத்தில் ஒரு இங்கிலாந்துகாரர் அமர்ந்திருந்தார். முதியவரைப் பார்த்ததும் அவர் லேசாக புன்னகைத்தார். பதிலுக்கு இவரும் புன்னகைத்தார். சிறிது நேரம் கழித்து அதே புன்சிரிப்புடன் அந்த இங்கிலாந்துக்காரர் கேட்டார் :ஹாய் வேர் ஆர் யு கோயிங்?........ ( where are u going?) 
முதியவர் : (பையை ஒருமுறை பார்த்துவிட்டு ) வேற யாரோட கோழியும் இல்லங்க......இது என்னோட கோழி......
இங்கிலாந்துக்காரர் : (சிறிது அதிர்ச்சியுடன் ) வ்வாட்?..... (what?)
முதியவர் : (சிறிதும் அசராமல் ) வாத்து இல்லைங்க....இது கோழி.....
இங்கிலாந்துக்காரர்: ( மிகவும் கடுப்பாகி கோபத்துடன்) கெட் அவுட்......( get out..)
முதியவர் : ( மிகவும் அமைதியாக) கெட்ட அவுத்து விட்டா கோழி ஓடி போயிடும்ங்க....
இங்கிலாந்துக்காரர் : ?????!!!!

அரண்மனையில் ஒரு போட்டி!


விஷ பாம்புகள் நிறைந்த
ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000
வராகன் பொன், அல்லது 10
கிராமங்கள், அல்லது தன்
ஒரே மகளான இளவரசியை திருமணம்
செய்வது, இந்த மூன்றில்
ஒரு பரிசை போட்டியாளர்
தேர்ந்தெடுக்கலா ம்.
உயிர் பிழைப்பது சிரமம் என்பதால்
போட்டி அறிவித்து வெகு நேரம்
ஆகியும் யாரும்
போட்டிக்கு வரவே இல்லை.
திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில்
குதித்ததும் மன்னருக்கு குஷி.
உயிரையும் துச்சமாக
மதித்து ஒரு சாதனையாளன்
போட்டிக்கு தயாராகி விட்டானே?
ஒரு வழியாக நீந்தி பத்திரமாக
கரையேறி விட்டான்.
அவனை கட்டி அணைத்து,
பாராட்டுதல்களை தெரிவித்து,
"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்!
ஆயிரம் வராகன் பொன்னா?"
"இல்லை..."
"பின்னே... 10 கிராமங்களா?"
"ப்ச்! வேண்டாம்..."
"ஆஹா! அப்படி என்றால்
இளவரசியை திருமணம்
செய்து கொள்கிறாயா?"
"தேவை இல்லை..."
"இது மூன்றில்
ஒன்றை தானே பரிசாக
அறிவித்து இருந்தேன்.
மூன்றுமே வேண்டாம்
என்று சொல்லி விட்டாயே? ஆனாலும்
உன்னை வெறும் கையுடன் அனுப்ப
எனக்கு மனம் வரவில்லை.
உனக்கு என்ன
வேண்டுமோ அதை கேள், கட்டாயம்
அதை தருகிறேன்..."
"என்னை எவன் இந்த குளத்தில்
தள்ளி விட்டான் என்று தெரியனும்...!"

உச்சக்கட்ட மானபங்கம் :



ஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்ப
போன் வந்துச்சி ...

பார்த்தா புது நம்பர்...

யாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்...

" Hello... யாரு? ! "ன்னேன்.

" நான் யாருங்குறது இருக்கட்டும் ... உங்க ஆபிசுல A.C Work
பண்ணுதா.? "ன்னு கேட்டான்.

"பண்ணுதே.. ! "ன்னேன் நான்

" Computer Work பண்ணுதா.?" ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.

" அதுவும் Work பண்ணுதே..! "ன்னேன் நான்.
அதுக்கு அந்த நாதாரி சொல்லுது,

" அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone
பேசிட்டு இருக்கீங்க..? ... நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானெ ...!